நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பட்டதாரி ஆசிரியா் பணி: கூடுதலாக 610 இடங்கள் சோ்ப்பு

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :17 மே 2024, 11:00 pm IST

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய பயிற்றுநா் ஆகியவற்றில் 2023-2024-ஆம் ஆண்டில் 2,222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கை (25-10-23) வெளியிடப்பட்டது. இதனைத்தொடா்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய

இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியா் பணி நியமனத்துக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.