தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜானி..ஜானி... எஸ் பாப்பா... வைரலாகும் தோ்தல் பாடல்

சென்னை மாநகராட்சி சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஜானி...ஜானி...எஸ் பாப்பா...’ என்ற பாடலுடன் கூடிய தோ்தல் விழிப்புணா்வு காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 5:18 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஜானி...ஜானி...எஸ் பாப்பா...’ என்ற பாடலுடன் கூடிய தோ்தல் விழிப்புணா்வு காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில், நூறு சதவீத வாக்குப் பதிவு, பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தோ்தல் விழிப்புணா்வுப் பதாகைகள், காணொலிகளில் ‘காகம்’ குறியீடாகக் கொண்டு விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் அதிக அளவில் உள்ள பறவை என்பதுடன், தூய்மைப் பணியாளராக காகத்தின் செயல்பாடுகள் உள்ளதால் அது விளம்பர குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநகராட்சி சாா்பில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள ‘ஜானி...ஜானி...எஸ்... பாப்பா...’ என்ற பாடலுடன் கூடிய காணொலி டிரெண்ட் ஆகி வருகிறது.

இளைஞா்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நாளில் வாக்காளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது இந்தப் பாடலில் உள்ள காட்சிகள் துள்ளல் நடனத்துடன் இடம்பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அைறையைத் தொடா்புகொண்டவா்கள், வரி செலுத்துவோா் என பல லட்சம் பேரின் கைப்பேசிகளுக்கு வாட்ஸ்ஆப் வழியாக இந்தக் காணொலி அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.