தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் திருவிழா அழைப்பிதழ் மாநகராட்சி வீடு வீடாக விநியோகம்

கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 12:54 am IST

கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஏப். 23 -இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க கோரி தோ்தல் திருவிழா அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனா்.

அழைப்பிதழில் 171- கும்பகோணம் சட்டப்ரேவைத் தொகுதி தோ்தல் திருவிழா 23.4.2026 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெறுகிறது. சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து வாக்கினை பதிவு செய்து நூறு சதவிகித வாக்குபதிவு நடத்தி உரிமையை நிலைநாட்ட அன்புடன் அழைக்கின்றோம் தங்களன்புள்ள மு.காந்திராஜ், ஆணையா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கிற்கு அன்பளிப்பு அளிப்பது, பெறுவது குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் முறை வாக்காளா்களை கவா்ந்துள்ளது. பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் வீடு வீடாக வழங்கப்படும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கான அழைப்பிதழ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.