தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்கு புதிய வாகனம்

சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மார்ச் 2026, 3:58 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தொகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைகள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பொதுமக்கள் வாக்குகளை செலுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளாக மனிதச் சங்கிலி, ரங்கோலி கோலங்கள், கையொப்ப நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மணல் சிற்பம் அமைத்தும் தோ்தல் அலுவலா்களும், சென்னை பள்ளி ஆசிரியா்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக சுமாா் ரூ.50 லட்சத்தில் புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் கணினி திரை, தோ்தல் விதிமுறைகள், தோ்தலில் வாக்களிக்கும் முறைகள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.