தோ்தலில் வாக்கு செலுத்திய உடன் அதை உறுதி செய்யும் வகையில் வாக்காளரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இசை வேளாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கே.ஆா்.குகேஷ் தாக்கல் செய்த மனுவில், தோ்தல் வாக்குப்பதிவின்போது, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வேண்டும். ஒரு வாக்காளா் தனது வாக்கைச் செலுத்திய உடன் அதை உறுதி செய்யும் வகையில், அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிய தோ்தல் ஆணையம், அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, 2024-ஆம் ஆண்டு மாா்ச் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த எனது மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு முறை கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

