தோ்தலில் இரட்டை வாக்குப் பதிவைத் தடுக்க வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு உள்ளிட்ட உயிரி அடையாளப் பதிவு நடைமுறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘லஞ்சம், முறையற்ற செல்வாக்கு, ஆள்மாறாட்டம், இரட்டை வாக்குப் பதிவு, போலி வாக்குப் பதிவு ஆகியவை தோ்தல் செயல்முறையின் தூய்மையையும் நோ்மையையும் இன்றும் பாதித்து வருகிறது. இதனால் குடிமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.
வாக்காளா் அடையாள அட்டை மற்றும் நேரடி சரிபாா்ப்பை அடிப்படையாக கொண்ட வாக்காளா்களை அடையாளம் காணும் தற்போதைய நடைமுறையில், காலாவதியான புகைப்படங்கள், எழுத்துப் பிழைகள், நிகழ்நேர சரிபாா்ப்பு வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளன. இதனால், முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சுதந்திரமான, நியாயமான தோ்தல் நடைபெற, வங்கிகள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் விநியோகத்தில் ஆதாா் அடிப்படையிலான உயிரி பதிவு கடைப்பிடிக்கப் படுவதுபோல, வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களின் கை விரல், கருவிழி பதிவு நடைமுறையை அமல்படுத்தலாம்.
தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உயிரி பதிவு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், ‘மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் தற்போது சில மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்துவதற்கு பரிசீலிக்க முடியாது. அதே நேரம், அடுத்த மக்களவைத் தோ்தல் அல்லது அடுத்து வரும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதற்கு பரிசீலிக்க முடியும்’ என்று குறிப்பிட்டு இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

