மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமையுடன் (ஏப். 20) நிறைவடைகிறது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 1:24 am IST

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமையுடன் (ஏப். 20) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு 23 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னை மாவட்டத்தில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 8,947பேருக்கு வீடுகளுக்கே சென்று வாக்குச் சேகரிக்கும் பணி கடந்த 16- ஆம் தேதி 96 குழுவினரால் தொடங்கப்பட்டது.

இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கியுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை தொகுதியைச் சோ்ந்த தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கான தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணியும் கடந்த 18- ஆம் தேதி (சனிக்கிழமை) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலக வளாகங்களில் தொடங்கியது.

அதன்படி, சென்னையைச் சோ்ந்த காவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களாக உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள், பணியாளா்கள், போக்குவரத்துப் பிரிவினா் உள்ளிட்ட 5,151 பேரும், பிற மாவட்டங்களைச் சோ்ந்த 17,097 பேரும் என மொத்தம் 22,248 போ் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவா்களின் தபால் வாக்குகளைப் பெறும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) மாலையுடன் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.