தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மொட்டை அடித்து, மிளகாய் மாலையுடன் சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

மிளகாய் மாலையணிந்தும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது பற்றி..

News image

வேட்புமனு தாக்கல் செய்த நூர் முகமது

Updated On :4 ஏப்ரல் 2026, 1:25 pm IST

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொட்டை அடித்தும், மிளகாய் மாலையணிந்தும் சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது தனது வித்தியாசமான பிரச்சார முறைகளால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான நூர் முகமது, தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 30 ஆம் தேதி, 49வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு செய்த மண் சட்டியுடன் பேரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் சட்டியை உடைத்து, தனது வேட்பு மனுவை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார். ஓட்டுக்குப் பணம் வாங்கினால், இறுதிச்சடங்கு வீட்டிலேயே நடக்கும் என்ற கருத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவே இந்த மாதிரி செய்ததாக விளக்கம் அளித்தார். மேலும், கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்; ஆனால் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது, கோவை கிணத்துக்கடவு தொகுதியில் 50வது முறையாகப் போட்டியிட வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சிறுவண்டியில் கயிறு கட்டி இருவர் இழுத்து கொண்டு வந்தனர். நூர் முகமது மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்து, தனது மனுவைத் தாக்கல் செய்தார். மக்கள் பணத்திற்கு அடிமையாகாமல், நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் மொட்டை அடித்து தலையில் மிளகாய் அரைப்பதோடு, நம்மைப் பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் என்பதை உணர்த்தவே பிச்சைக்கார வேடமணிந்து வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும்,மக்கள் தான் மிகப்பெரிய அதிகாரம். அவர்கள் மாற்றம் கொண்டுவர முடியும் என்று கூறிய அவர், இந்தத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். நூர் முகமது இதற்கு முன்பும் குதிரையில் "ராஜா' வேடத்தில், விவசாயியாக ஏர் கலப்பையுடன், சவப்பெட்டியுடன் உள்ளிட்ட பல்வேறு விதமான முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

1997ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்த அனுபவமும் அவருக்கு உள்ளது. இதுவரை குடியரசுத் தலைவர் முதல் உள்ளாட்சித் தேர்தல்கள் வரை 48 முறை போட்டியிட்டுள்ளதாகவும், விழிப்புணர்வுக்காக மட்டும் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், தற்போது தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

Summary

Independent candidate Noor Mohamed filed his nomination papers to contest the Kinathukadavu Assembly constituency after shaving his head and wearing a garland of chilies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.