தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொண்டாமுத்தூர்! இறுதிச்சடங்கு பானையுடன் மனு தாக்கல் செய்த சுயேச்சை!

News image

சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 3:58 am IST

தொண் டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர், மயானத்தில் இருந்து இறுதிச்சடங்கு செய்யும் பானையுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது (68). இவர் ஒவ்வொரு தேர்தலின்போதும் வித்தியாசமான முறையில் குதிரையில் ராஜா, ஏர் கலப்பையில் விவசாயி உள்பட பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் உள்பட இதுவரை 48 முறை போட்டியிட்டுள்ளார். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையா கப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இதுவரை வேட்புமனு தாக்கலுக்காக ரூ.8 லட்சம் நூர் முகமது. செலவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் வாக்குக்குப் பணம் வாங்கினால் இறுதிச் சடங்குதான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 49-ஆவது முறையாக தொண்டாமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, மயானத்தில் இருந்து மண்பானையுடன் வந்தவர் 100 மீட்டருக்கு முன்பு உடைத்து, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை தெற்கு கோட்டாட்சியருமான மாருதிபிரியாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.