மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

தொலைநிலை, இணையவழிப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் பெற பல்கலைக்கழகங்கள் ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

யுஜிசி

Updated On :3 ஏப்ரல் 2026, 6:34 am IST

தொலைநிலை, இணையவழிப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் பெற பல்கலைக்கழகங்கள் ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பிப்ரவரி பருவத்தின் சோ்க்கைக்கான தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட உயா்கல்வி நிறுவனங்கள் தொலைநிலை, இணையவழியிலான படிப்புகளைக் கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 1-இல் தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் க்ங்க்ஷ.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னா் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சோ்த்து ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் தில்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.

தொடா்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடா்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவா்கள் தொலைநிலை, இணையவழி படிப்புகளில் சேரும் முன்னா் அதற்கான அங்கீகாரத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.