புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

News image

நடிகர் சுதேஷ் குமார்

Updated On :3 மே 2026, 9:54 pm IST

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

'சரங்கா' எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட மூத்த நடிகரான சுதேஷ் குமார், தனது 95வது வயதில் மூளை பக்கவாதம் ஏற்பட்ட உடன், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 1ஆம் தேதி காலமானார்.

நடிகர் சுதேஷ் குமார் தனது மறைவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏப்ரல் 30 வரை அங்கேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

பிரித்விராஜ் கபூரின் புகழ்பெற்ற நாடகக் குழுவின் வாயிலாகவே, அவர் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். 1931ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பிறந்த சுதேஷ் குமார், அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மருத்துவராக வேண்டும் என்பதே அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது. இருப்பினும், நடிப்புத் துறையின் மீது அவருக்கு இருந்த தீராத ஆர்வம், அவரைத் திரையுலகை நோக்கி ஈர்த்தது.

Summary

Veteran actor Sudesh Kumar (95), known for his role in the romantic film Saranga, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.