மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

யோகி பாபுவின் 300 ஆவது படம்! அர்ஜுனன் பேர் பத்து டீசர்!

யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது குறித்து...

News image

அர்ஜுனன் பேர் பத்து டீசரில்...

Updated On :18 மார்ச் 2026, 8:47 pm IST

நடிகர் யோகி பாபு நடிக்கும் ”அர்ஜுனன் பேர் பத்து” எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “அர்ஜுனன் பேர் பத்து” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் புதன்கிழமை (மார்ச் 18) வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, “அர்ஜுனன் பேர் பத்து” படமானது யோகி திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான யோகி பாபு நடிக்கும் 300 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The teaser of the film "Arjunan Per Paththu" starring actor Yogi Babu has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.