மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்யின் நினைத்தேன் வந்தாய் பட பாணியில் புதிய தொடர்!

நினைத்தேன் வந்தாய் பட பாணியில் எடுக்கப்பட்டுள்ள புதிய தொடர் குறித்து...

News image

துளசி தொடர் போஸ்டர் - படம்: எக்ஸ்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:53 pm IST

நடிகர் விஜய்யின் நினைத்தேன் வந்தாய் பட பாணியில் புதிய தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

நடிகர் விஜய், நடிகைகள் ரம்பா, தேவையானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நினைத்தேன் வந்தாய். நாயகனான விஜய்யை ரம்பா மற்றும் தேவையானி இருவரும் காதலிப்பதுபோல இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும்.

இந்தப் படத்தின் கதையைப்போலவே புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு துளசி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். துளசி தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தத் தொடர் மே 11 ஆம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம், மணமகளே வா, புனிதா தொடர்கள் விரைவில் நிறைவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், துளசி தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

A new serial, styled after Actor Vijay's film Ninaithen Vandhai, is set to air on Sun TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.