கிழக்குச் சீமையிலே பட பாணியில் எடுக்கப்படும் புதிய தொடரின் மூலம் நடிகர் ரஞ்சித் மீண்டும் தொடரில் நடிக்கிறார்.
சின்ன திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். வழக்கமாக அண்ணன் - தங்கை பாசப்பிணைப்பை மையப்படுத்தி பல தொடர்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக, தாய் மாமன் உறவை மையப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு தாய் மாமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தாய் மாமன் தொடர் விஜயகுமார் - ராதிகா நடித்திருந்த கிழக்குச் சீமையிலே படத்தின் பாணியில் எடுக்கப்படுகிறது. இதில் நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் சிந்துநதி பூ, மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ரஞ்சித். இவர், கவுண்டம்பாளையம், பீஷ்மர் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரின் மூலம் நடிகர் ரஞ்சித் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று 70 நாள்கள் வரை இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தாய் மாமன் தொடர் மூலம் சின்ன திரையில் மீண்டும் தோன்றுகிறார் நடிகர் ரஞ்சித். கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் இந்தத் தொடரில் தாய் மாமன் பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் இயக்குகிறார். பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
தாய் மாமன் தொடரின் முன்னோட்டக் காட்சி ரசிகர்கள் மத்தியில் வைராலாகியுள்ள நிலையில், ஒளிபரப்பு தேதி, நேரம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Actor Ranjith has returned to the small screen in a new series being produced in the style of the film Kizhakku Seemaiyile.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி

விஜய்யின் நினைத்தேன் வந்தாய் பட பாணியில் புதிய தொடர்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


