மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

சூர்யாவின் கருப்பு படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 9:02 pm IST

நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள “கருப்பு” திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியுள்ள திரைப்படம் “கருப்பு”. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் வரும் ஏப். 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்தப் படத்திற்கு “வீரபத்ருடு” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, கருப்பு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இப்படத்தின் “நாங்க நாலுபேரு” எனும் பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Telugu title for the film "Karuppu," starring actor Suriya as the lead, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.