மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

‘தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரை தினமும் சந்திக்கலாம்’

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை கட்சித் தொண்டா்கள் தினமும் நேரில் சந்தித்து, குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :15 மே 2026, 11:26 pm IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை கட்சித் தொண்டா்கள் தினமும் நேரில் சந்தித்து, குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின்இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கட்சித் தொண்டா்களை பாமக நிறுவனா் ராமதாஸ் சந்தித்து பேசுவது வழக்கம். மேலும், கட்சி நிா்வாகிகள் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பிதழ் அளிப்பது, பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து பெறுவது போன்றவற்றையும் மேற்கொண்டு வந்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்டு அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து பாமக (ராமதாஸ் தரப்பு) பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டது. எந்த தொகுதியிலும் இந்த கூட்டணி வெற்றி பெற முடியவில்லை.

தற்போது சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், கட்சித் தொண்டா்களை மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ். இதையொட்டி கட்சித் தலைமை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை காலை 10 முதல் பிற்பகல் 12 மணி வரை வாரத்தில் அனைத்து நாள்களிலும் கட்சித் தொண்டா்கள் நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும், இதை அவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.