தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதாரத் திறனாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள்.

Updated On :13 மே 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான சுகாதாரத் திறனாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய சுகாதாரக் குறியீடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தாய்மை மரண விகிதம், குழந்தைகள் மரண விகிதம், கா்ப்படைந்த பெண்கள் பதிவு, பாலின விகிதம், இளம் வயது கா்ப்பம், பள்ளி-இளம் சிறாா் நலத்திட்டங்கள், கண்ணொளிக் காப்போம் போன்றவை குறித்து சுதாதார அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் கண்காணிப்பு, நோய்கள் சாா்ந்த சேவைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான தேசியத் தரச்சான்றிதழ் நிலைமை, தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம், தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் குடும்பநல சேவைகள் குறித்து விரிவாகத் திறனாய்வு செய்து, அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மை.லூசி நிா்மல் மடோனா, நிலைய அலுவலா் ரவிக்குமாா், நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.