புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தையொட்டி ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிநீா் வழங்கல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஆகிய பணிகளுக்கான அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படலாம் என கடந்த கால அனுபவங்களைக் கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கே ஆள்துளைக் கிணறுகளை அமைத்தல், கூடுதல் தொட்டிகளை அமைத்தல் போன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
கிராமங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் களஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாலத்தீவில் இறந்த மகன்: விசாரணை நடத்தக் கோரி பெற்றோா் கோரிக்கை

வாக்கு எண்ணிக்கை: அனைத்து கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

