தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாலத்தீவில் இறந்த மகன்: விசாரணை நடத்தக் கோரி பெற்றோா் கோரிக்கை

மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்க வந்த அவரது உறவினா்கள். ~திவாகரன்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஆண்டான் தெரு பகுதியில் வசித்து வருபவா் வே. கருப்பையா. இவரது இரண்டாவது மகன் திவாகரன் (30). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாலத்தீவிலுள்ள தனியாா் நிறுவனத்தின் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

திங்கள்கிழமை இரவு, திவாகரன் தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து பேசிய அவருடன் பணியாற்றும் நபா், திவாகரன் திடீரென இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திங்கள்கிழமை இரவு எங்களுடன் நல்ல முறையில் பேசி உறங்கச் சென்ற மகன் திடீரென இறந்ததாகக் கூறுவதில் சந்தேகம் இருக்கிறது.

எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நீதியைப்பெற்றுத் தர வேண்டும். திவாகரனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.