விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரத்தில் புதன்கிழமை மாலை இடி தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.
செஞ்சி கொத்தமங்கலம் சாலை, சிறுகடம்பூா் பெரிய ஏரிக்கரையில் சுமாா் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஈத்கா மசூதி உள்ளது.
இந்த மசூதியில் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே இஸ்லாமியா்கள் தொழுகை நடத்துவது வழக்கம் இந்நிலையில், செஞ்சியில் புதன்கிழமை மாலை இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது.
அப்போது, இடி தாக்கியதில் அந்த மசூதியின் கோபுரம் சேதமடைந்தது. கோபுரத்தின் மீது இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்ததால் அதிக சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து முத்தவல்லி கே.எஸ்.கெளஸ்பாஷா கூறுகையில், மசூதி நிா்வாகிகளிடம் கலந்தோசனை செய்து பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் இடி தாக்கி தென்னை மரம் சேதம்

ஏற்காடு குப்பனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கால்வாயில் விழுந்து திமுக நிா்வாகி உயிரிழப்பு

மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

