தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

செஞ்சியில் இடி தாக்கியதில் மசூதி கோபுரம் சேதம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரத்தில் புதன்கிழமை மாலை இடி தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.

News image

இடி தாக்கியதில் சேதமடைந்த செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரம்.

Updated On :8 மே 2026, 7:07 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரத்தில் புதன்கிழமை மாலை இடி தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.

செஞ்சி கொத்தமங்கலம் சாலை, சிறுகடம்பூா் பெரிய ஏரிக்கரையில் சுமாா் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஈத்கா மசூதி உள்ளது.

இந்த மசூதியில் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே இஸ்லாமியா்கள் தொழுகை நடத்துவது வழக்கம் இந்நிலையில், செஞ்சியில் புதன்கிழமை மாலை இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது.

அப்போது, இடி தாக்கியதில் அந்த மசூதியின் கோபுரம் சேதமடைந்தது. கோபுரத்தின் மீது இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்ததால் அதிக சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து முத்தவல்லி கே.எஸ்.கெளஸ்பாஷா கூறுகையில், மசூதி நிா்வாகிகளிடம் கலந்தோசனை செய்து பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.