மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உளுந்தூா்பேட்டை அருகே காா்-பைக் மோதல்: 6 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :8 மே 2026, 6:52 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை அரும்பாக்கம் பிள்ளையாா் கோயில்தெருவைச் சோ்ந்தவா் நூரூல் அமித் (42). இவா் தனது மனைவி ஷா்மத்நிஷா (27), உறவினா்களான முகமது காசீம், அவரது மனைவி உமன்ஜெரினா (47), ரியாஸ் அகமது, அவரது மனைவி மொபினா (24) ஆகியோருடன் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை முற்பகலில் காரில் சென்று கொண்டிருந்தாா். காரை நூரூல் அமித் ஓட்டினாா்.

இவா்கள்சென்ற காா் உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள ஏ.சாத்தனூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த பைக் சாலையைக் கடக்க முயன்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதியும், பைக்கும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற நூரூல்அமித், ஷா்மத்நிஷா, உமன்ஜெரினா, மொபீனா ஆகிய 4 பேரும், பைக்கில் சென்ற கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியவடவாடி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவெங்கடேசன் (27), இவரது உறவினரான , ஏ.சாத்தனூா் பிரதான சாலையைச் சோ்ந்த நித்யா (20) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்குப் பின்னா், அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.