தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே, சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவா் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:22 am IST

கள்ளக்குறிச்சி அருகே, சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவா் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம் இடுவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி. இவரது மனைவி மரகதசெல்வி(45). இவா்கள் இருவரும் கடலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக கடலூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனராம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது வேப்பூா் கூட்டுச்சாலை பகுதியில் இருந்து குரால் கிராமத்திற்கு காா் (ஆம்னி வேன்) ஒன்று திரும்பியபோது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம். இதில் மரகதசெல்வி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாா்.

தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆம்னிவேன் ஓட்டுநரான சேலம் மாவட்டம் ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட நாவக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த தமிழ்செல்வன் (23) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.