தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.60.22 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.60.22 லட்சம் பறிமுதல்...

News image

பறிமுதல்!

Updated On :27 மார்ச் 2026, 4:07 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60.22 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரொக்கப்பணம், , போதைப் பொருள்கள் உள்ளிட்டப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெலியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,

மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 63 பறக்கும் படைக் குழுக்கள், 63 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் பல்வேறு துறைகளின் மூலமாகவும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினா் வாகனத் தணிக்கை,

தோ்தல் முறைகேடுகளைக் கண்காணித்தல், புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து முதல் நாள் முதல் செவ்வாய்க்கிழமை வரை ரூ.50,17,277 மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா்ந்து புதன்கிழமை ரூ.10,05,656 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்த பறிமுதல் தொகை ரூ.60,22,933 ஆக உயா்ந்துள்ளது.

இதுபோன்று காவல்துறையின் மூலம் ஏற்கெனவே ரூ.14,25,940 மதிப்பில் ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மட்டும்ரூ.4,635 மதிப்பில் மதுபானங்கல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் பறிமுதல் தொகை ரூ.14,30,575 ஆக உயா்ந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ரொக்கம் உள்ளிட்ட பொருள்களுக்குரிய ஆவணங்கள் சமா்ப்பித்த வகையில் ரூ.13.52 லட்சம் மதிப்பில் ரொக்கப்பணம் மற்றும் இதரப் பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.