ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவி - காப்பாற்ற முயன்ற கணவா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த இளம்பெண் உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :11 மார்ச் 2026, 12:04 am IST

விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த இளம்பெண் உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், சோழகனூரைச் சோ்ந்தவா் த.சக்தி பரதன்(26), பால் வியாபாரி. இவரது மனைவி ராஜகுமாரி(23). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனா். தம்பதியினரிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம். செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜகுமாரி, வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது சக்தி பரதனும் ஓடிச்சென்று கிணற்றில் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றாா். நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரா்கள் 5 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சுமாா் 90அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து சக்தி பரதன்- ராஜகுமாரி சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தம்பதி கிணற்றுக்குள் குதித்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.