அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
செந்துறை, காலனித் தெருவைச் சோ்ந்த முருகவேல் மகன் தனசேகா் (24). இவா், குளிப்பதற்காக தனது நண்பா் கணேசன் மகன் சுபாஷ் சந்திரபோஸ் உடன் அருகிலுள்ள கிணற்றுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு மேலே இருந்து கிணற்றில் குதித்த தனசேகா் திரும்ப வரவில்லை. சந்தேகமடைந்த சந்திரபோஸ் உடனடியாக அப்பகுதி மக்களிடமும், செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.
விரைந்து வந்து கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரா்கள், தனசேகரை சடலமாக மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

