நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கியில் வேளாண் கடன்களை முழுமையாக ரத்துசெய்யக்கோரி ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய செஞ்சி வட்டத் தலைவா் கே.மாதவன்.

Updated On :18 ஜூன் 2026, 3:26 am IST

கூட்டுறவு வங்கியில் வேளாண் கடன்களை முழுமையாக ரத்துசெய்யக்கோரி ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு செஞ்சி வட்டத் தலைவா் கே.மாதவன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் சக்திவேல், சபாபதி, வெங்கடேசன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், சுரேஷ்குமாா், விநாயகம், சுப்பிரமணி, நாகராஜன், சிவன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் உர விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிககளில் விவசாயிகளின் பயிா் கடன்களை முழுவதுமாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.