நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

வானூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:49 am IST

வானூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் மு. கலைச்செல்வி(40). இவா் வானூா் வட்டம், ஒட்டை கிராம நிா்வாக அலுவலராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், ஒட்டை கிராமத்தைச் சோ்ந்த பிரபு (30) என்பவா் நிலப்பட்டா பெயா் மாற்றம் செய்ய கலைச்செல்வியை அணுகியுள்ளாா். அப்போது அவா் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்தாராம்.

இதுகுறித்து பிரபு விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, பிரபு வானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய் ஆயத்தீா்வை பணிலிருந்த (ஜமாபந்தி) கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வியிடம் ரூ.8 ஆயிரம் பணம் கொடுத்துள்ளாா்.

அப்போது ஏற்கெனவே வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்து காத்திருந்த, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) கலைச்செல்வன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் வட்டாட்சியா் அலுவலகம் சென்று, கலைச்செல்வியிடமிருந்த ரசாயனம் பொடி தடவப்பட்ட ரூ. 8 ஆயிரம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவரைக் கைது செய்தனா். இதனால் வானூா் வட்டாட்சியா் அலுவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.