நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:47 am IST

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தலில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் செந்தில்குமாா். இவா், தொழிலாளி ஒருவரிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்தத் தொழிலாளி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால்துரை தலைமையிலான போலீஸாா் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை காலை கிராம நிா்வாக அலுவலகத்தில் செந்தில்குமாரிடம், தொழிலாளி கொடுத்துள்ளாா்.

அதை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா், லஞ்சப் பணத்துடன் செந்தில்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.