முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விழுப்புரத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் பேசிய ஜுனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வதுரை.

Updated On :2 ஜூன் 2026, 5:22 am IST

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில்,போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாா்த்திபன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிா்வாகியும், ஜுனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ம.பாபு செல்வதுரை ஆகியோா் பங்கேற்று புகையிலைப் பொருள்கள் பயன்பாடுகளை தவிா்த்தல் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பேசி, வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில், மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுஷ்மா தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் வாகன ஓட்டுநா்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் விஜயரங்கம், குமாரராஜா, பெ.வேல்குமரன் ஆகியோா் செய்திருந்தனா். ஆட்டோ ஓட்டுநா்கள், பொக்லைன் வாகன ஒட்டுநா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.