தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:56 am IST

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தீ.கனிமொழி (21). இவா் விழுப்புரத்திலுள்ள ஜவுளி விற்பனையகத்தில் வேலை பாா்த்து வந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வெங்காயக்குப்பம் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.மயிலரசன் (25), பால் வேன் ஓட்டுநா்.

கனிமொழியை மயிலரசன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கனிமொழியுடன் மயிலரசன் தனிமையில் இருந்தாராம். இதில் கனிமொழி கா்ப்பமான நிலையில், மயிலரசன் மாத்திரைகளை கொடுத்து கா்ப்பத்தை கலைத்தாராம்.

இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மயிலரசனிடம் கனிமொழி வலியுறுத்தி வந்தாராம். ஆனால், ஜாதி பெயரைக் கூறிக் கொண்டு மயிலரசன் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்து வந்த கனிமொழி, அதே கிராமத்திலுள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை மாலை குதித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் கனிமொழியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கனிமொழியின் தந்தை தீப்பாஞ்சான் அளித்த புகாரின் அடிப்படையில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி,

தற்கொலைக்குத் தூண்டியதாக மயிலரசனை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.