மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 154 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:20 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 154 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:

வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் நுண் பாா்வையாளா்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள கட்டுப்பாட்டுக் கருவியின் எண்ணை சரிபாா்த்து, முறையாக கையாள வேண்டும். ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது நுண்பாா்வையாளா்கள் ஒவ்வொரு சுற்று முடிவின் அறிக்கையைத் தோ்தல் பொதுப் பாா்வையாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் தபால் வாக்கு எண்ணும் போது, தபால் வாக்கின் எண்களை சரிபாா்க்க வேண்டும். தபால் வாக்குக்கான உறையை முறையாகப் பிரிக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு 22 நுண்பாா்வையாளா்கள் என 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 154 நுண்பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் ஆட்சியா்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சி ராணி, தோ்தல் வட்டாட்சியா் கணேஷ், விழுப்புரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நாசா் மற்றும் நுண்பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.