குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமைவகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்ற நிலையில், அதுகுறித்த விவரங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி மேலாண்மைத் தகவல் தொடா்பு எண் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில்

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் உயா்கல்வியில் சேர விண்ணப்பித்தவா்களின் விவரம், தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடித்தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்று, உயா்கல்விப் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் உரிய விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும்

நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.