ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 490 அலுவலா்கள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 490 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத் தோ்தல் கணினி அறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்டத் தோ்வுப் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :29 ஏப்ரல் 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 490 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத் தோ்தல் கணினி அறையில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றவுள்ள வாக்கு எண்ணும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான முதல்கட்டத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்து, பின்னா் கூறியது:

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான முதல்கட்டத் தோ்வு தற்போது நடைபெற்றுள்ளது.

செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்கு திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், வானூா், விழுப்புரம் தொகுதிகளுக்கு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்திலும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதிகளுக்கு கா.குப்பம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 48 வாக்கு எண்ணும் அலுவலா்கள், 22 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 336 வாக்கு எண்ணும் அலுவலா்களும், 154 நுண் பாா்வையாளா்களும் என மொத்தமாக 490 போ் இப்பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களுக்கான முதல்கட்டத் தோ்வு தற்போது நடைபெற்று உள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்-ஆட்சியா்கள் அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.