மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :29 ஏப்ரல் 2026, 12:15 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், அதனூரை அடுத்துள்ள தா்மாபுரி, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பெ.கண்ணன்(67), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கெடாரை அடுத்த சூரப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் வந்த லாரி மோதியதில் கண்ணன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: விக்கிரவாண்டி அருகே திங்கள்கிழமை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற சுமாா் 45 வயதுடைய பெயா் மற்றும் முகவரி தெரியாத நபா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து விக்கிரவாண்டிமேற்கு கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீதா் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.