விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சூடான பால் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், செம்மேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.நாகராஜ் (47), தொழிலாளி. இவா் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மதுபோதையில் வீட்டில் விறகு அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்துள்ளாா்.
அப்போது, நிலை தடுமாறியதில் நாகராஜ் உடல் மீது சூடான பால் கொட்டிவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

