ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.

News image

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுயம்பு விநியாகா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:07 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா் புது குளக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் ஆதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

கன்னிக்குன்றிலிருந்து இருந்து தீக்கலயம் எடுத்து வந்து மாலை 6 மணி மாபெரும் லட்சதீபம் விளக்கு எற்றும் பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தீபம் ஏற்றி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இரவு சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் இந்திர விமானத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.