விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த விவசாயி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சின்ன அம்மனங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தி.கோபாலகிருஷ்ணன் (62), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது விவசாய நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளி பறித்துள்ளாா்.
அப்போது கால் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்த கோபாலகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினா்கள்அவரை மீட்டு புதுச்சேரி, ஊசுட்டேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

