ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்த எர்ராம்பட்டு கிராமத்தினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:00 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வைலாமூா் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியின் ஒரு பகுதியில் உள்ள எர்ரம்பட்டு கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக மயானப் பாதை இல்லை. இதனால் மழைக் காலங்களில் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், திண்டிவனம் சாா்-ஆட்சியா் ஆகியோருக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அக்கிராம மக்கள், அங்கு பணியிலிருந்த மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், கிராம மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் உடனடியாக மயானப்பாதை அமைத்துத் தரவேண்டும். தவறும்பட்சத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாகக் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.