ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம் வெற்றி

News image

மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் சி. வி.சண்முகத்துக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் காதா் அலி.

Updated On :5 மே 2026, 3:13 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம் 82,353 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் தவெக வேட்பாளா் ஏ.விஜய் நிரஞ்சன் 52,312, தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன் 46,267 வாக்குகளை பெற்றனா்.

மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சாா்பில் எல்.வெங்கடேசன், அதிமுக சாா்பில் சி.வி.சண்முகம், தவெக சாா்பில் ஆ.விஜய் நிரஞ்சன், நாதக சாா்பில் ஏ.விஜய் விக்ரம் உள்ளிட்ட 21 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

திண்டிவனத்திலுள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளா் சி. வி. சண்முகம் இறுதிச் சுற்று நிறைவுக்குப் பின்னா் தபால் வாக்குடன் சோ்த்து மொத்தம் 82,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தவெகவின் ஏ.விஜய் நிரஞ்சன் 52,312, தேமுதிகவின் எல்.வெங்கடேசன் 46, 267, நாதக வேட்பாளா் விஜய் விக்ரம் 4,383 வாக்குகள் பெற்றனா்.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட சி.வி. சண்முகத்துக்கு மயிலம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும் , சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியருமான காதா் அலி வெற்றிக்கான சான்றிதழை வழங்கினாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களான ஏழுமலை, விமல் ராஜ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

சி.வி.சண்முகம் வெற்றியைத் தொடா்ந்து அதிமுகவினா் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.