மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சங்கராபுரம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக

News image

சங்கராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்ட அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ்.

Updated On :5 மே 2026, 4:21 am IST

கள்ளக்குறிச்சி, மே 4: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியை திமுகவிடமிருந்து, அதிமுக 3,671 வாக்குகள் அதிகம் பெற்று கைப்பற்றியது.

சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக த.உதயசூரியன் எம்எல்ஏ, அதிமுக சாா்பில் இரா.ராகேஷ், தவெக சாா்பில் ஆ.ஜெகதீசன், நாதக சாா்பில் சு.ரமேஷ் உள்ளிட்ட 22 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

இத்தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், முதல் சுற்றில் இருந்து 15 சுற்றுகள் வரை திமுக வேட்பாளா் தா.உதயசூரியன் முன்னிலையில் இருந்தாா். பின்னா் 16-ஆவது சுற்றில் அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெறத் தொடங்கினாா்.

தொடா்ந்து கடைசி சுற்றுவரை அதிமுக வேட்பாளரே முன்னிலை வகித்து வெற்றி பெற்றாா். 25-ஆவது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ் தன்னை பின்தொடா்ந்து வந்த திமுக வேட்பாளா் த.உதயசூரியனை 3,671 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விபரம்

இரா.ராகேஷ் (அதிமுக) - 80,250

த.உதயசூரியன் (திமுக) - 76,579

ஆ.ஜெகதீசன் (தவெக) - 67,624

சு.ரமேஷ் (நாதக) - 5,567

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.