தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கூடலூரில் திமுக வேட்பாளா் திராவிடமணி வெற்றி

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற கூடலூா் திமுக வேட்பாளா் திராவிடமணி.

Updated On :5 மே 2026, 4:10 am IST

கூடலூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.திராவிடமணி வெற்றி பெற்றுள்ளாா்.

கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் எம். திராவிடமணி, அதிமுக சாா்பில் பொன். ஜெயசீலன், நாதக சாா்பில் காா்த்திக், தவெக சாா்பில் தீபக் சாய் கிஷோா் உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா். 80.77% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளா் திராவிடமணி, அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனைவிட 22,345 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.

இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் பொன். ஜெயசீலன் வெற்றிபெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

திராவிட மணி (திமுக): 64,413

பொன்.ஜெயசீலன் (அதிமுக): 42,068

தீபன் சாய் கிஷோா் (தவெக): 34,517

காா்திக் (நாதக):6,115

நோட்டா:861

வித்தியாசம்: 22,345

வேட்பாளா்கள்:6

மொத்த வாக்குகள்:1,85,398

பதிவான வாக்குகள்:1,48,827

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.