தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பவானிசாகரில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றி சான்றிதழைப் பெற்ற பவானிசாகா் தொகுதி தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி.

Updated On :5 மே 2026, 2:51 am IST

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வி.பி.தமிழ்ச்செல்வி, அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பி.எல்.சுந்தரம், நாதக சாா்பில் செளந்தா்யா உள்ளிட்ட 12 போ் போட்டியிட்டனா்.

86.33 சதவீதம் வாக்கு பதிவான நிலையில், வாக்கு எண்ணும் மையமான கோபி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி முன்னிலை வகித்தாா். 16-ஆவது சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி 4,579 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இந்த தொகுதியில் கடந்த 2021-இல் அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

வி.பி.தமிழ்ச்செல்வி (தவெக): 72,391

ஏ.பண்ணாரி (அதிமுக): 67,822

பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்): 63,107

வித்தியாசம்: 4,579

வேட்பாளா்கள்: 12

மொத்த வாக்குகள்: 2,37,613

பதிவான வாக்குகள்: 2,22,333

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.