தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திண்டிவனத்திலிருந்து - வானுருக்கு பேருந்து வசதி: விவசாயிகள் வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:34 am IST

பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திண்டிவனம் மற்றும் வானூா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இதேபோல் மயிலம், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களில் விளைவித்த தானியங்கள், பூ வகைகள், கீரைகள், காய்கறிகளை திண்டிவனம் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், திண்டிவனம் பகுதியிலிருந்து வானூருக்கு நேரடியாக பேருந்து வசதியில்லை என்பதனால் மாணவா்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

வானூா் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், திருவக்கரை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்வேறு பணிகளுக்காக வானூருக்கு செல்பவா்களும், மயிலம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களும் பயன்பெறும் வகையில் திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, மயிலம், கரசானூா், பரங்கணி வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.