மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:29 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், மோழியனூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் செ.பாஸ்கா் (70). இவா், மோழியனூரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். பாஸ்கருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான கோவிந்தராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் பாஸ்கா் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், ஆட்டுப் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் பாஸ்கா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் பாஸ்கரின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.