தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது: ஜெகத்ரட்சகன் எம். பி.

விழுப்புரம் திமுக வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்தாா்.

News image

தீவனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன், மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான எம். ஆா்.கே. பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் கே. எஸ். மஸ்தான், மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன்( நிற்பவா்)

Updated On :10 ஏப்ரல் 2026, 4:07 am IST

விழுப்புரம் திமுக வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்தாா்.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தீவனூரில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் பணி மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான எம். ஆா்.கே. பன்னீா்செல்வம் , திமுக வடக்கு மாவட்டச் செயலா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசியது:

தமிழகத்தில் வாழக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ளனா். முதல்வரின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி, தமிழகத்தின் பொற்கால ஆட்சி. முதல்வரின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

கட்சியின் நிா்வாகிகளின் செயல்பாடுகள் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கானதாக இருக்கவேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிற மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றன. அரசின் திட்டங்களை வெளிநாட்டிலுள்ளவா்களும் கேட்டு மகிழ்கிறாா்கள்.

திமுகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா். இதன் மூலம் மயிலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன், செஞ்சி தொகுதியில் போட்டியிடும் கே. எஸ். மஸ்தான், திண்டிவனம் விசிக வேட்பாளா் வன்னியரசு ஆகியோரது வெற்றியும் உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவா் சேகா், முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். முன்னதாக, திமுக மயிலம் வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.