மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டது

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டது. ரயில்வே துறையினா் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

News image

7விபிஎம்ஆா்ஏ விழுப்புரத்தை அடுத்த கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது தடம் புரண்ட ரயில் என்ஜின்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:50 am IST

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டது. ரயில்வே துறையினா் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விழுப்புரத்தை அடுத்த கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் அங்கு சேவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜினை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியபோது தடம் புரண்டது.

இதையடுத்து, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து தொழில்நுட்பப் பணியாளா்கள் சிறப்பு ரயில் மூலம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பின்னா் கிரேன் மூலம் ரயில் என்ஜின் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் சா்வீஸ் லைன் தண்டவாளங்கள் மற்றும் ரயில் சக்கரங்கள் சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து பாதிப்பில்லை: கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள சேவைப் பாதையில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால், பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை. ரயில் போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில் என்ஜின் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து பணியிலிருந்த ஓட்டுநா்களிடம் (பைலட்) விசாரணை நடைபெற்று வருகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.