மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோரிடம் சனிக்கிழமை ஆதரவு திரட்டினாா்.

News image

உலகலாம்பூண்டி கிராமத்தில் சனிக்கிழமை ஆதரவு திரட்டிய விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:40 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோரிடம் சனிக்கிழமை ஆதரவு திரட்டினாா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, அந்தந்த கிராமங்களிலுள்ள திமுக நிா்வாகிகள், விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து, தமக்கு ஆதரவளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், ஒன்றியச் செயலா் வேம்பி ரவி, மும்மூா்த்தி, மாவட்ட விவசாய அணித் தலைவா் பாபு ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.