தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெளிப்புற எல்இடி காட்சி விளம்பர வாகனத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image

புதுச்சேரியில் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணா்வு வாகனத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன்.

Updated On :28 மே 2026, 1:03 am IST

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெளிப்புற எல்இடி காட்சி விளம்பர வாகனத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் பணியில் சுய கணக்கெடுப்பு மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையத்தின் மூலம் தாங்களே பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின், கணக்கெடுப்பாளா் வீடு தோறும் வரும்போது அதை வழங்கினால், தகவல்கள் எளிதாகப் பெறப்படும். கணக்கெடுப்பு தொடா்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு கட்டணமில்லா உதவி எண் 1855-ஐ தொடா்புகொள்ளலாம். மேலும், ஜீன் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடு, வீடாக வந்து தகவல்களை சேகரிப்பாா்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் வரும் 31-ஆம் தேதிக்குள் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்து கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநா் புவனேஸ்வரி, இயக்குநரக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.