பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

News image

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 4:02 am IST

திருப்பூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பை வியாழக்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு, எண்ம முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொது மக்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களது விவரங்களைத் தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பாளா் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தின் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியா் செயல்படுகிறாா். மேலும், மாநகராட்சிப் பகுதிக்கு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாநகராட்சி

ஆணையாளரும், ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலா்களாக 9 வட்டாட்சியா்கள், 7 நகராட்சி ஆணையாளா்கள், 14 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 13 ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.

சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநரால் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநா் சுபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சு.துரைமுருகன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஃபெலிக்ஸ் ராஜா, சிவபிரகாஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் குமாா் ஆகியோருடன் அனைத்து வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.