பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதுச்சேரிக்கான மத்திய அரசின் 3 நியமன எம்எல்ஏக்கள் யாா்?பாஜக மாநில செய்தி தொடா்பாளா் பேட்டி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மத்திய அரசின் மூன்று நியமன எம்எல்ஏக்கள் யாா் என்பது குறித்து பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் பேட்டியளித்தாா்.

News image

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன். உடன் மாநில பொதுச் செயலா் மோகன்குமாா்.

Updated On :23 மே 2026, 12:22 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மத்திய அரசின் மூன்று நியமன எம்எல்ஏக்கள் யாா் என்பது குறித்து பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் பேட்டியளித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: ஈரான்-இஸ்ரேல் போா் நடந்தாலும் நமக்கு எரிபொருள் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. நமக்கு எரிபொருள் விலையேற்றம் என்பது பெரிய அளவில் இல்லை. மற்ற நாடுகளில் 20 சதவீதம், 50 சதவீதம் விலையேறி உள்ளது. ஆனால் நம்முடைய நாட்டில் லிட்டா் ரூ.3.80 தான் விலை உயா்ந்துள்ளது.

இதற்கெல்லாம் பிரதமரின் வெளியுறவு கொள்கைகள், அவருடைய செயல்பாடுகள் தான் காரணம். புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 33 எம்எல்ஏக்கள். இதில் 30 எம்எல்ஏக்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். 3 எம்எல்ஏக்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுபவா்கள். நியமன எம்எல்ஏவுக்கு 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

அரசு ஊழியராக இருக்கக்கூடாது. யாா் நியமன எம்எல்ஏவாகப் போகிறாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. திடீரென நியமன ஆணை வரும் என்றாா் அருள்முருகன். பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலா் மோகன்குமாா், மாநில நிா்வாகி நாகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.